FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, November 16, 2012

சரஸ்வதி வந்தனம்

சரஸ்வதி வந்தனம்




Photo: சரஸ்வதி வந்தனம்
 
தன்னைக் கற்ற லன்றிக் கல்வி 
பின்னை ஒன்றுண்டோ வேறு - ஞானத் 
தாமரையி லெழுந்தருளும் தாயே ! சரஸ்வதி ! 
மாமதுரி ! தன்னைக் கற்றுணர எமக்கருள்வாய்.
 
அன்பெழி லுண்மையுருவா யிலங்கும் 
உன்னில் எமைக் கண்டு ஒன்றின்றி வேறு 
ஒன்றென்றும் இல்லை என உள் உணர்ந்து 
நின்றிருக்க நீயருள்வாய்.
 
அருள்கின்ற நீயும் 
திரள்கின்ற அருளும் 
பெறுகின்ற யாமும் வெவ்வேறா? 
பொருளின் பொருள் பொருளே !
 
நெற்றிக்கண் பரமனும் சக்தியும், 
நெடுமாலுமி லக்குமியும் போல் 
கலைமகளே நான்முகன். 
கற்றலே சிருஷ்டி!




 தன்னைக் கற்ற லன்றிக் கல்வி 
 பின்னை ஒன்றுண்டோ வேறு - ஞானத்                                     
 தாமரையி லெழுந்தருளும் தாயே ! சரஸ்வதி ! 
 மாமதுரி ! தன்னைக் கற்றுணர எமக்கருள்வாய்.

அன்பெழி லுண்மையுருவா யிலங்கும் 
உன்னில் எமைக் கண்டு ஒன்றின்றி வேறு 
ஒன்றென்றும் இல்லை என உள் உணர்ந்து 
நின்றிருக்க நீயருள்வாய்.

அருள்கின்ற நீயும் 
திரள்கின்ற அருளும் 
பெறுகின்ற யாமும் வெவ்வேறா?    
பொருளின் பொருள் பொருளே !

நெற்றிக்கண் பரமனும் சக்தியும், 
நெடுமாலுமி லக்குமியும் போல் 
கலைமகளே நான்முகன். 
கற்றலே சிருஷ்டி!



23-10-2012
ஸ்ரீரங்கம்
திருச்சி - 6