FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Monday, August 27, 2012


கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன்  பிரசுரம் : சொல்வனம் | இதழ் 74 | 16-08-2012
1. மனிதத் துன்பவியல்
தம்மை முழுதாய்க் கொடுத்து,
-காற்றைத்
தழுவும் மரங்கள்.
எதன் மேலும் ஏறி
விளையாடும் அணில்கள்
இசைக்கும் புட்கள்
வானம் பெற்றுப் பிழைத்த கோள்கள், விண்மீன்கள்
வந்து போகும் விருந்தாளி மேகங்கள்
ஒளி, வெளி, வளி,
சிந்தாத கடல், புல் மலரும் பூமி.
எங்கும் என்றும் குறைவுறா அமுதம்
பருகாத மனம்.

2. எல்லா இதயங்களிலும் இவ்வடைப்பு
உலகை - அதாவது பிரபஞ்சத்தை -
அதாவது உம்மையும், என்னையும்
எனப் பொய்யாய்ப் பிரிந்திருக்கும் நம்மை -
உருவாக்கி இயக்கும் சக்தியென்று
ஒன்று தனியாய்
உள்ளதென்ற எண்ணம்.
அதில் பிறந்த அவ்விருமை
அடைத்து விடுகிறது இதயத்தை.
மொத்த உலகத்தின் - அதாவது பிரபஞ்சத்தின் -
அதாவது நீரும், நானும் எனத் தோன்றும் நம்மின் -
உள்ளிரைச்சல் ஓய்கையில்
அஹம் பிரம்மாஸ்மி
தத் த்வம் அஸி,
தௌ ஆர்ட் தட்
அன் அல் ஹக்
நானே உண்மை
என்றெல்லாம்
வார்த்தைகளற்று
மூச்சொவ்வொன்றிலும்
முறுவல்
கேட்கலியோ?
– கேட்டு
மூடி திறக்கலியோ?

3. ஆதாரக் கேள்வி அல்லது பதில்
அர்த்த நாரியாவது?                                  
அதுதானே முழுமை.
அரனும், அம்மையும்தானே
இருமை ?
-o00o-

No comments: