FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Saturday, November 19, 2011

மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)


மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)

வ.ஸ்ரீநிவாசன் பிரசுரம் : சொல்வனம் | இதழ் 59 | 12-11-2011 
சூரியனை
- மகிழ்வோடு
வரவேற்கும் - எங்கேயும் போலான -
ஆதரவு வெளிர் வானம்.
துணை உள்ளோம், துயர் துடைக்க என
உயர்ந்திருக்கும் பெயர் தெரியா
பெருமரங்கள்.
விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.
மென் செடிகள், புதர்கள்,
தாவரங்கள், புள்ளினங்கள்,
பூச்சிகள், புழுக்கள்.
மேக உறவினர்கள்.
குளிர்ப் பச்சை.
எல்லாவற்றையும் இணைக்கும்
பூங்காற்று. 
வளைவில் திகைப்பூட்டும்
அருவிகள், அருவித் தடங்கள்.
தூரத்துப் புகை ஊர்கள்…..
மனித இதயம் போல்
கடிந்திருந்தாலும்
அனைத்தையும்
ஏந்தி நிற்கும் மலை.
-o00o-
இவை,
மற்றும்
மலைதனைப் பிளந்து
சாலை செய்த தொழிலாளர்
பொறியாளர்
அனைவருக்கும்
என் வணக்கம்.
-o00o-
பார்வை அமைதியைக்
குலைக்கும்
கவிதையின் சொல்லுருவைத்
தொலைத்தேன்.
-o00o-
நெஞ்சப் பனிமலையுருகி
மொத்தமாய்க் கரைந்து
பெருகிய தன்பருவி.
 

1 comment:

natbas said...

அருமையான கவிதை. எந்த பாவனையுமின்றி, கவித்துவ மிகைப்படுத்தல்களுமின்றி, இயற்கையின் முன் தன் வாயடைத்து நிற்பதை எழகாகச் சுட்டுகிறது.

பகிர்வுக்கு நன்றி.