FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Monday, May 24, 2010

மெய்யாதரவு

மெய்யாதரவு பிரசுரம் : நவீன விருட்சம் (ஏப்ரல்-ஜூன் 2002)இதழ்-56

காற்று
ஒருக்களித்த
கதவின் வழியாக
நீளமான
ஒற்றைப் பின்னலைப் போல்
ஊள்ளே வந்து
புது மூச்சைக் கொடுத்து
வியர்வையை அகற்றி
மனதைத் துடைத்து
பின் வழியாகப்
போய் விட்டது
நன்றி நினைப்பதற்குள்.

எழுதியது : 23-10-94

2 comments:

ஜீவி said...

ஆமாம், ஒருவிதத்தில் 'நன்றி' என்பது சொல்வதை விட நினைப்பது தான் ஆத்மார்த்தமாகப் படுகிறது. இந்த அற்புதமான அனுபவத்தைப் படித்துவிட்டு நானும் இப்பொழுது அதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...

நன்றி திரு. ஜீவி.