FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Monday, May 24, 2010

வைதவ்யம்.

வைதவ்யம். பிரசுரம் நவீன விர்ருட்சம் (ஜூலை - செப் 2002) இதழ்-57

விதிர்க்கும் விளக்கின் சுடர்;
அது மட்டும்தான் துணை.
அப்பா போன பிறகு
அடுக்குள்ளில்தான் படுக்கை.
(இன்று மாலையிலிருந்தே
மின்சாரம் இல்லை.
விளக்கின் வாழ்க்கை எனவே நீண்டது.)
கொஞ்ச நெரத்தில் சுடர்
அடக்கமாய் சிம்னிக்குள்
அமர்ந்து கொள்ளும்.
ஏற்கனவே
முன்னிரவென மயங்கி
கரப்பான்கள் புறப்பாடு.
கருஞ்சுவர் கர்ப்பகிரஹங்களிலிருந்து
மூட்டைப் பூச்சிகள் எழுந்தருளல்.
தன்னந்தனியான விதவை
அன்னைக்கும் அவளின் இரு
சின்னக் குழந்தைகளுக்கும்
இவை பற்றிக் கூட பயமில்லை.
கோடையின் உஷ்ணம் தாளாது
அவ்வப்போது உத்திரத்திலிருந்து
விழும்
தேள்களைப் பற்றித்தான்.

எழுதியது : 8-2-02.

No comments: